ADS 468x60

அழகு தேற்றாத்தீவு..

வணக்கம். "நேர்மையான வழியில் கிடைக்கிற தோல்வி , அயோக்கியமான முறையில் வரும் வெற்றியை விட சிறந்ததாகும்."

23 March 2024

பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இறக்குமதி அதிகரிப்புதான்

கடந்த காலத்திலிருந்தே, நம் நாட்டு மக்கள் நம் சொந்த பொருட்களை விட வெளிநாட்டு பொருட்களையே அதிகம் மதித்து நுகர்கின்றனர். நிற்க, எமது நாட்டில் எவ்வளவு ருசியான, சுகாதாரமான மற்றும் நல்ல நம்பகமான உணவாக இருந்தாலும், வெளிநாட்டில் இருந்து வந்தது என்று சொன்னால், எந்த ஒரு கேள்வி பார்வையோ தயக்கமோ இன்றி வாங்கி நுகர்வதனை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். தோல் வெள்ளையாக இருந்தால், காய் பெரிதாக இருந்தால், பளபளப்பாக இருந்தால், ஒன்றல்ல நூறு நோய் வந்தாலும் வெளிநாட்டுப் பொருட்களை விரும்புவார்கள் நம் மக்கள். வெளிநாட்டுப் பொருட்களைப் பொறுத்தவரை, இந்த நாட்டு மக்கள் எந்தக் குப்பைக் குவியலையும் விரும்புகிறார்கள் என்பதையே நாம் பழகியிருக்கின்றோம்.

இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு வேகமாகக் குறைவதற்கு முக்கியக் காரணம், தடையற்ற இறக்குமதியாகும். இந்த நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுவதற்குப் பதிலாக பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து பொருட்களை இந்த நாட்டில் நிரப்புகிறோம். அது பற்றிய அலசல்தான் இது.

20 March 2024

நான் கிழக்கின் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அதிகாரியாக இருந்தால்!

எனது தேசத்தின் பாகுபாடற்ற சுற்றுலாத்துறையினை எத்தனையோ வகையில் வளர்த்தெடுக்க முடியும். ஆனால் அதற்கான அறிவும், திறனும் ஆற்றலும் இல்லாமையினால் அவற்றை கொண்டாட முடியவில்லை, வருவாய் ஈட்டமுடியவில்லை. ஊழலற்றவகையில் முதலீடகளை ஊக்குவித்தால் மிக பிரமாதமாக இத்துறையினை கட்டியமைக்கலாம். அதற்கான பரிந்துரைகள் இந்த கட்டுரையின் அடியில் கொடுக்கப்பட்டுள்ளன.

உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆய்வாளர் மார்கோ போலோ தனது முதல் இலங்கைப் பயணத்தில் பின்வருமாறு கூறினார். 'இலங்கை அதன் பரப்பளவில் உலகின் சிறந்த தீவு.' இன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு நினைவு கூர்வோம். மார்கோ போலோ பன்னிரண்டாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்தார். அவர் இங்கு வந்தபோது, இலங்கை முற்றிலும் பொருளாதார இயந்திரமாக இருந்தது. அப்போது சீன மற்றும் ரோமானிய சுற்றுலா பயணிகள் இங்கு அதிகளவில் வந்திருந்தனர். 

16 March 2024

நான் மட்டக்களப்பில் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால்!

நேற்றைய நிலவரப்படி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை எழுநூறு ரூபாயைத் தாண்டியது. சந்தையில் நிலவும் பெரிய வெங்காயத் தட்டுப்பாட்டைத் தீர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் உயிரை மட்டும் பிடிச்சிக்கொண்டு கல்வி, தொழில், வருமானம், வேலைவாய்ப்பு, சுகாதாரம், நல்லது கெட்டது எல்லாத்தையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் துன்பப்படும் இந்த நேரத்தில் சாதாரண உணவுப்பொருட்களைக் கூட பெறமுடியாத நிலையில் ஏங்கும் மக்களுக்கு நான் மட்டும் இந்த மண்ணில் நான் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால். 

பொருட்கள் சேவைகள் தட்டுப்பாட்டுக்கு பல தீர்வினை கொடுத்து நடைமுறைப்படுத்தியிருப்பேன்.

15 March 2024

கிராமம் மகிழ்சிகளின் சொர்கவாசல்

எத்தனை தான் வசதிகள் நகரங்களில் இருந்தாலும், இன்னொருவரை பார்ப்பதற்கும், உறவாடவும் வசதியில்லாத நரகவாழ்க்கைதான் நகர வாழ்க்கை. கனகாலம் கண்டு தம்பிய இஞ்சால வாருங்கோ, மத்தியானம் சாப்பிட்டுத்துப்போங்கோ, இளணீர் ஒன்று குடிப்பமா, எருமைப்பால் இருக்கிறது போடவா, சோளத்த முறிச்செடுங்க தம்பி அப்பப்பா எத்தனை உபசரிப்பு, விருந்தோம்பல் வினாக்கள் எம் கிராமத்து மக்களின் வெள்ளை மனங்களின் வரவேற்பில்.

மரத்துக்கு கீழ பாயை தட்டி பணிய இருக்கச் சொல்லி, செம்பில தண்ணியக்கொண்டு செய்யும் சேமம் இருக்கே! அட 5 ஸ்டார்கொட்டலிலும் கிடையாது போங்க.

13 March 2024

ஏன் இலங்கைக் கல்வியில் சீர்திருத்தங்களை இவ்வாறு செய்ய முடியாது?

  • பிள்ளைகளின் பாடசாலை பிரவேச வயதை நான்கு வயதாக குறைக்கவேண்டும்
  • 10ஆம் தரத்தில் ஜீ.இ.சி. பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.
  • ஆங்கில வழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். 
  • தேசிய பாடசாலைகள், மாகாண சபை பாடசாலைகள் என வகைப்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த நாட்டில் படிப்படியாக ஒரே வகையான பாடசாலைகளை நிறுவ வேண்டும்.

சில பாடசாலைகளில் ஆய்வகங்கள் இல்லை. நூலகங்கள் கிடையாது, விளையாட்டு மைதானங்கள் இல்லை. அதுபோக நீச்சல் குளங்கள் இல்லை. அழகியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகுப்பறைகள் கிடையாது. அறிமுகப்படுத்தப்படும் நட்பு வகுப்பறைகள் இல்லை. இன்னும் பல சுத்தமாக குடிநீர் கிடையாது, சுகாதாரமான கழிவறைகள் கிடையாது. என்னய்யா கத விடுறீங்க! 

07 March 2024

இலங்கையில் தடைகளை உடைக்கும் புதிய பெண் தொழில்முனைவோர்

உலகளவில், தொழில் துறையில் புதிய யுகம் பிறக்கிறது. இதில், பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. உலக தொழில் முனைவோர் ஆய்வுக் கண்காணிப்பு அமைப்பின் (Global Entrepreneurship Monitor - GEM) 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, உயர் வளர்ச்சி கொண்ட தொழில் முனைவோரில் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. இலங்கையிலும் பெண்கள் தொழில் முனைவோராக உருவாகும் போக்கு அதிகரித்து வருகிறதா?

01 March 2024

இலங்கை தலைவர்கள் சிறந்த அரசியல் பொருளாதார நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்

2024ம் ஆண்டு உலகளவில் தேர்தல் நடக்கும் வருடமாக அமைகிறது. 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இலங்கையிலும் பல தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வருடம் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 

2022ம் ஆண்டு தொடக்கத்தில், சுதந்திர இலங்கையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது நாடு. மிகக் குறுகிய காலகட்டத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடி தாண்டி, அரசியல் மற்றும் சமூக துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

29 February 2024

கல்லாநிதிகளின் பொல்லாத ஆசை

இன்று கல்லா நிதிகள் அவர்களை அழைப்புக்களில் போடுவதற்கும், பொது இடங்களில் அழைப்பதற்கும் மறந்துவிட்டால் அவர்களின் அளப்பறை தாங்க முடியாமல் பல நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் திக்குமுக்காடுவதைப் பார்க்கின்றோம். ஆம் இன்று உலகில் மூன்று நாடுகளில் கலாநிதிப் பட்டங்களை மிக மலிவாகப் பெறலாம். முதலாவது இந்தியா. அங்கு கலாநிதிப் பட்டங்களை வாங்க மிகக்குறைந்த ரூபாய்கள் மட்டுமே செலவழித்தால் போதும். இன்னும் ஒரு 250 ரூபாய் கொடுத்தால் கறுப்புத் துணி, பட்டமளிப்புத் தொப்பி அணிந்து, நீண்ட பிட்டு மூங்கில் போன்ற பட்டச்சுருள் உறையைப் பிடித்துக் கொண்டு பட்டமளிப்புப் படம் எடுக்கலாம் இல்லையா. 

27 February 2024

போரின் நிழல்கள்: மனதார மீள் எழுவோம்!

 2013ம் ஆண்டு கிளிநொச்சி அம்பாள்நகர் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நீண்டகால உளநல பாதிப்புகளை எடுத்துக்காட்டுகிறது. புகைப்படத்தில், போரின் தாக்கம் அவர்களின் முகங்களில் தெளிவாக வெளிப்படுகிறது. அச்சம், கவலை, துயரம் போன்ற உணர்வுகள் அவர்களின் பார்வையில் தெரிகின்றன.

ஆய்வு மற்றும் மீட்பு முயற்சிகள்

போர் முடிந்த உடனே, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்திறனை ஆய்வு செய்யும் குழுவில் நான் பணியாற்றினேன். ஆய்வின் ஒரு பகுதியாக தரவு சேகரிப்புடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டோம். உதாரணமாக.